தாய் கண் எதிரே சிறுவனை கடித்து தின்ற சிறுத்தை : கதறித் துடித்த தாய்!!

369


உத்ரகாண்டில் சிறுவனை சிறுத்தை கொன்றதையடுத்து கிராம மக்கள் காட்டிற்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உத்தரகாண்ட் மாநிலம் ஹாரினாகாரி பகுதியில் காட்டையொட்டிய கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று 7 வயது சிறுவனை கொன்று தின்று உள்ளது.

நேற்று இரவு சிறுவன் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற போது அவனை சிறுத்தை தாக்கியதாக தெரிகிறது. சிறுவனுடைய அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து அவனது தாயார் ஓடிவந்துள்ளார்.



அப்போது சிறுத்தை சிறுவனை கடித்து உண்பதை பார்த்து கதறிய அவர், சிறுவனை காப்பாற்ற முயன்றார். கிராம மக்களும் ஓடி வந்து சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர்.



ஆனால் அதற்குள் சிறுத்தை சிறுவனை கொன்று தின்றுவிட்டது. இதனால் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள காட்டிற்கு தீ வைத்து உள்ளனர். இதையடுத்து காட்டுப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.