வவுனியாவில் ‘வன்னி முரசம்’ பத்திரிகை வெளியிட்டு வைக்கப்பட்டது!!

497

‘வன்னி முரசம்’ பத்திரிகை வெளியீட்டு நிகழ்வு இன்று (13.06) வன்னி குறோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஆர்.ரூபன் தலைமையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

பத்திரிகையின் முதற் பிரதியை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வெளியிட்டுவைக்க வன்னி மகளிர் பேரவையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செல்வி எஸ்.அர்ச்சனா பெற்றுக்கொண்டார். கவிஞரும் எழுத்தாளருமான யோ.புரட்சி பத்திரிகையின் விமர்சன உரையை ஆற்றினார்.

நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்..

ஐநா சபையின் தீர்மானங்களுக்க அமைவாக சமூக சகவாழ்வு இலங்கையில் சம உரிமையுடன் சகல மக்களும் அனுபவிக்க கூடிய விதத்தில் ஒரு அரசியல் தீர்வை எட்டவேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தின் அழுத்தத்தின் காரணமாக இலங்கை அரசை அனுசரித்து செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது என தெரிவித்தார்.