மேலும் 41 இலங்கை அகதிகள் இன்று நாடு கடத்தல்..

495

aus

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற மேலும் ஒரு தொகுதி இலங்கை அகதிகள் இன்று நாடு கடத்தப்படுவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

41 இலங்கை அகதிகள் இவ்வாறு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒகஸ்ட் தொடக்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் 30வது அகதிகள் விமானம் இதுவாகும்.

குறித்த காலத்தில் 1247 அகதிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதுடன் அதில் 1035 பேர் சுய விருப்பின் பேரில் நாடு திரும்பியவர்களாவர்.