வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

618

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

மகாறம்பைக்குளம், கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்துவந்த 4 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய விஜயபாலன் என்பவரே தனது வீட்டு முற்றத்தில் இருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் இரவு வீட்டில் குடும்பத்தார் இருக்கும் பொழுதே வீட்டைவிட்டு வெளியேறி ய நிலையில் இன்று காலை வீட்டுக்கு முன்புறமாக உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கில் தொங்கி சடலமாக மீட்கப்பட்ட நபர் இரு பெண் பிள்ளை, இரு ஆண் பிள்ளைகளின் தந்தையாவர்.