திருமணமான 2 வாரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

289

தமிழகத்தில் திருமணமான இரண்டே வாரத்தில் மனைவியை நண்பர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு விட்டு வந்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செட்டிமூலையைச் சேர்ந்தவர் வீரசாமி. விவசாய கூலியான இவருக்கு நீலாவதி என்ற மனைவியும், குமாரி (24) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் வீரசாமி தன்னுடைய மகளான குமாரியை திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு கடந்த 25-ஆம் திகதி திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதையடுத்து நேற்று பிறந்த வீட்டில் விருந்து முடிந்து, குமார் புகுந்த வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது குமாரியின் நகையை வாங்கு அடகு வைத்து ராஜா மது அருந்தியுள்ளார்.

அதன் பின் இரவு 11 மணிக்கு குமாரியை, அருகிலிருக்கும் தன்னுடைய நண்பர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டு விட்டு வந்துள்ளார்.

இதனால் அந்த நண்பர்களால் குமாரி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2 மணிக்கு வீடு திரும்பிய குமாரியை, ராஜா கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.

இந்த தகவல் குமாரியின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் அதிர்ச்சியடைந்து பொலிசாரிடம் புகார் அளித்ததால், தலைமறைவாக உள்ள குமாரியின் கணவர் மற்றும் அவரது நண்பர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.