இந்தியாவில் சிறையில் இருந்த காதலனுக்காக போதை பொருள் கடத்திய மாணவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கம் பராசத் நகரின் நாபரா பகுதியில் வசித்து வருபவர் சுஷ்மிதா மலாகர் (22). கல்லூரி மாணவியான இவர் போகிராத் சர்கார் என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் போகிராத் சர்காரை புர்த்வான் நகரில் பிஜ்பூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால், அவர் சர்கார் டம்டம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சுஷ்மிதா சிறையில் இருக்கும் காதலனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது காதலனுக்கு தேவைப்பட்டது என்று கூறி ஹெராயின் என்ற போதை பொருளை கடத்தி கொண்டு சென்றுள்ளார்.
இதை கண்டுபிடித்த பொலிசார் அவர் மேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.