கவர்ச்சியாக நடிப்பேன் : சானியாதாரா!!

309

Saniya taraஒருவர் மீது இருவர் சாய்ந்து படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சானியாதாரா. தற்போது சங்கராபுரம், அது வேற இதுவேற, பனி விழும் மலர் வனம், மெய் மறந்தேன், வாராயோ வெண்ணிலாவே படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சில படங்களில் கவர்ச்சியாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது..

கவர்ச்சியாக நடிப்பது தவறல்ல. கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிப்பேன். ஆனால் ஆபாசமாக நடிக்கமாட்டேன். சங்கராபுரம் படத்தில் எனக்கு நல்ல வேடம் அமைந்தள்ளது. இதில் ஹரிகுமார் ஜோடியாக நடிக்கிறேன். காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த கமர்சியல் படமாக தயாராகிறது.

கமலை எனக்கு பிடிக்கும். அவருடன் நடிக்கவும் ஆர்வம் உள்ளது. நடிகைகளில் ஜோதிகாவை பிடிக்கும். நான் தமன்னா சாயலில் இருப்பதாக பேசுகிறார்கள். சொந்த ஊர் ஐதராபாத். தமிழ் படங்களில் நடிப்பதால் தமிழ் கற்றுக்கொண்டு உள்ளேன். நடனம் தெரியும். கவிஞர் பா.விஜய்யுடனும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன் என்று அவர் கூறினார்.