வவுனியா தோணிக்கல் ஆலடி வீதி அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய மஹோற்சவப் பெருவிழா நேற்று(14.06.2018) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
காலை 7 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜை நடைபெற்று 10 மணிக்கு தீர்த்த உற்சவம் நடைபெற்றமையைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுடன் அம்பிகை வீதியுலாவும் இடம்பெற்றது.
முதலாம் நாள் திருவிழாவின் போது அம்பிகை இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திருக்காட்சியளித்தார்.