வவுனியாவில் வறியவர்களுக்கு உதவிகளை வழங்கும் வெளிச்சம் அறக்கட்டளை!!

339

 

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் கிராமத்தில் ஒருவேளை சாப்பாட்டிற்கும் அன்றாடம் தங்களுடைய பணிகளை செய்து வாழ முடியாத நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவுப்பொதி நேற்று முன்தினம் (13.06.2018) வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் லம்போதரனால் வழங்கி வைக்கப்பட்டது.

இதே வேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.06.2018 ) அன்று செட்டிகுளம் பிரதேசத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு தேவையான உணவு பொதியும் சிறு தொகை பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், செயலாளர் தி.கார்த்திக், பொருளாளர் செ.மேனதாஸ் மற்றும் சமூக நலன் விரும்பி ஜெகன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் விஜயகுமார் மற்றும் றஜுவ் , சுரேஷ் கலந்து கொண்டிருந்தனர்.