என் மகனை கருணைக் கொலை செய்து விடலாம் : பேரறிவாளனின் தாயார் கண்ணீர்!!

331

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெகு நாட்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்திட வேண்டும் என தமிழக அரசு விடுத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் இன்று நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி குறித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்திய ஊடகம் ஒன்றிற்கு தனது நேர்காணல் வழங்கியுள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் கூறுவதாவது,

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளதாகக் கூறியுள்ளார்.

திடீரென இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீடு எப்படி வந்தது என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே வேளை பேரறிவாளனை “விடுவிக்க விருப்பம் இல்லாவிட்டால் அவரை மத்திய அரசே கருணைக் கொலை செய்து விடலாம் ”என்று உருக்கமாக அற்புதம்மாள் உருக்கமாக தெரிவித்துள்ளார்.