சக வீரரை தாக்கிய கென்ய அணித்தலைவருக்கு தடை!!

361

Collins Obuyaகென்ய அணியின் அணித்தலைவர் கோலின் ஒபுயாவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இலங்கை வந்த கென்ய அணி 7 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 20-20 தொடரில் இலங்கை ஏ அணியுடன் விளையாடியது.

இதில் இலங்கை ஏ அணி 5-1 என தொடரை வென்றது. இத்தொடரின் போது கென்ய அணித்தலைவர் கோலின்ஸ் ஒபுயா, சகவீரர் இர்பான் கரீமை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய கிரிக்கெட் கென்யா ஒழுங்கு நடவடிக்கை குழு ஒபுயாவுக்கு இரண்டு போட்டியிலும், கரீமுக்கு ஒரு போட்டியிலும் விளையாட தடைவிதித்துள்ளது.

இதனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவுள்ள டுவென்டி-20 உலக கிண்ணத் தகுதிச் சுற்றின் இரண்டு பயிற்சி போட்டியில் ஒபுயா பங்கேற்க மாட்டார்.

இதுகுறித்து கிரிக்கெட் கென்யா ஒழுங்கு நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒபுயா, கரீமுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் இவர்கள் மீண்டும் ஈடுபடும் பட்சத்தில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.