அன்று காதல் கணவனை பறிகொடுத்த மனைவி : இன்று கம்பீரமான கல்லூரி மாணவி!!

378

கேரளாவில் ஆணவக்கொலைக்கு காதல் கணவனை பறிகொடுத்த நீனு, 17 நாட்கள் கழித்து கல்லூரிக்கு கம்பீரமாக புறப்பட்டுள்ளார்.

நீனு என்கிற மாற்று சமூகத்தைச்சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கெவின் ஜோசப் என்ற இளைஞர் கேரள மாநிலத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

கணவர் கொலை செய்யப்பட்ட பின், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நீனு வேதனையிலிருந்து மீண்டு கல்லூரி செல்லத் தொடங்கியுள்ளார்.

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த அவருக்கு, கெவின் ஜோசப்பின் பெற்றோர் ஆறுதல் அளித்து, படிப்பைத் தொடங்க உதவியுள்ளனர். கெவின் ஜோசப் கொலை செய்யப்பட்டு 17 நாள்களுக்குப் பிறகு, நீனு மீண்டும் வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார்.

கேரள அரசு கெவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. நீனுவின் படிப்புச் செலவையும் அரசே ஏற்றுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வெழுத வேண்டுமென்பது நீனுவின் லட்சியம்.