பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளான வான் : ஒருவர் படுகாயம்!!

227

ஹட்டன் – கொழும்பு வீதியின், குயில்வத்தை பகுதியில் வானொன்று பாதையை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற வானே விபத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீரற்ற காலநிலையினால் பாதையில் காணப்பட்ட தன்மை காரணமாகவே விபத்து நேர்ந்துள்ளது.

வானின் சாரதியே காயமடைந்து வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் பயணித்த ஏனையவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.