பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் யாழில் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் நல்லடக்கம்!!

473

யாழ். மல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞரின் சடலம் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சன் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன் போது மல்லாகம் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், இறுதி கிரியைகளின் போது எவ்வித்அசம்பாவிதமும் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறுதி கிரியைகளின் போது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.