யாழ். இளைஞனின் மரணத்திற்கான உண்மை காரணம் வெளியானது : அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி!!

630

மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞனின் மரணத்திற்கான காரணமும், மேலும் பல அதிர்ச்சியான விடயங்களும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் உடலில் இருந்து அதிகளவான குருதி வெளியேறியமையே உயிரிழப்புக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்று 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் குறித்த இளைஞரை காப்பாற்றியிருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் போது தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனையை யாழ். போதனா வைத்திய சாலையில் சட்டவைத்திய அதிகாரி எஸ்.மயூரதன் மேற்கொண்டார். இவருடைய அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “இளைஞனின் முதுகு பக்கத்தால் சென்ற துப்பாக்கி குண்டானது அவரது இடது பக்க நெஞ்சு பகுதியால் வெளியேறியுள்ளது.

இன்னுமொரு துப்பாக்கி குண்டு தோள் மூட்டு பகுதியால் சென்றுள்ளது. எனினும் இருதயத்தில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. நுரையீரல் பகுதியில் இருந்து அதிகளவான குருதி வெளியேறியமையால் மரணம் சம்பவித்துள்ளது.

ஆனால் சம்பவம் நடைபெற்று 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்திய சாலையில் அனுமதித்திருந்தால் காப்பற்றியிருக்க முடியும். அத்துடன் இளைஞனின் முகத்தில் இரண்டு இடங்களில் தாக்கப்பட்டமைக்கான காயங்கள் உள்ளன. மற்றும் அவரது உடைகளும் கிழிந்திருந்ததாக” விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பாப்படுத்தபடும். எனவும் தெரிவிக்கப்பட்டது.

மல்லாகம் சகாய மாதா தேவாலயம் முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த 34 வயதான மேசன் தொழிலாளியான பாக்கியராஜா சுதர்சன் என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.