இளம் வயது இலங்கை கணவன் மரணம் : பரிதாப நிலையில் பிரித்தானிய மனைவி!!

717

இலங்கையரான தனது கணவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் தான் இலங்கையில் சிறைபட்டுள்ளதாக பிரித்தானிய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

26 வயதுடைய இலங்கை இளைஞனான பிரியன்ஜனத டி சொய்ஸாவை திருமணம் செய்த 60 வயதான பிரித்தானிய நாட்டு பெண் டியென் டி சொய்ஸா என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தான் இலங்கையில் கடன்காரி ஆகியுள்ளதாகவும், பிரியன்ஜனவுக்கு ஒரு லட்சம் பவுண்ட் பணம் வழங்கியதாக அவர் பிரித்தானிய ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

பிரித்தனியாவின் எடின்பரோ பிரதேசத்தில் வாழ்ந்த அவர் தற்போது இலங்கையில் சிறைக்கைதி போன்று உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னால் மீண்டும் பிரித்தானியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்தில் இருந்த தனது வீட்டை விற்பனை செய்த பின்னர் இலங்கைக்கு வந்தவர் பிரியன்ஜனவுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். அவர்கள் இருவரும் 2011ஆம் ஆண்டு சந்தித்து கொண்டுள்ளனர்.

2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு பிரித்தானியா சென்றவர் ஸ்கொட்லாந்தில் இருந்த வீட்டை விற்பனை செய்து விட்டு இலங்கைக்கு வந்துள்ளார். இதன்போது பிரியன்ஜன ஹோட்டல் ஊழியராக சேவை செய்துள்ளார்.

தற்போது தான் இலங்கையில் இருந்து பிரித்தானியா செல்வதற்கு தேவையான பணம் இல்லை. கடந்த வருடம் முதல் தன்னிடம் ஒன்றுமே இல்லை. கடன்காரியாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரை டெக்ஸி சாரதியாக்குவதற்கு 31000 ஆயிரம் பவுண்ட் செலவிட்டு ஹயுன்டாய் மினிபஸ் வண்டி ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பணம் பறிக்கும் நோக்கில் கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது கணவர் வசதியானவர் என்பதனால் பலருக்கு பொறாமை என நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அவருக்கு அழகான சிறிய வீடு, வாகனம் ஒன்று, முச்சக்கர வண்டி ஒன்று இருந்தமையினால் பொறாமைப்பட்டார்கள்.

எனது கணவர் அவர்களுக்கு பணம் வழங்கினார். எனினும் அவர்களுக்கு அது போதவில்லை. மேலும் பணம் வழங்காமையினால் அவரை கொலை செய்து விட்டார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.