தனது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த நபரொருவர் செய்த மோசமான காரியம்!!

251

தனது திருமண நிகழ்வினை மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தும் நோக்கில் நபரொருவர் ஏ.ரீ.எம் இயந்திரத்தை உடைத்து 47 இலட்சம் ரூபா பணத்தை திருடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது நண்பரை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜீ.குணதாச உத்தரவிட்டுள்ளார்.

நீர்கொழும்பில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி கட்டடத் தொகுதியில் காணப்பட்ட ஏ.ரீ.எம் இயந்திரமொன்றே உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபர்களிடமிருந்து 28 இலட்சம் ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நபர் ஏற்கனவே ஜாஎல பிரதேசத்திலும் பெருந்தொகை பணத்தை ஏ.ரீ.எம் இயந்திரங்களை உடைத்து களவாடியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரதான சந்தேகநபர் தனது திருமணத்திற்கான தங்க ஆபரணங்கள், ஆடைகள் என்பனவற்றுக்கு இந்த பணத்தை கொண்டு கொடுப்பனவுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.