மலைப் பாம்பை கழுத்தில் போட்டு செல்பி : விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!!

300

மேற்கு வங்காளம் ஜல்பாய்குரி எனும் பகுதியில் மக்கள் குடியிருக்கும் இடத்தில மலைப்பாம்பு ஒன்று உள்ளே நுழைந்து விட்டது.

அதனை பிடிக்க வனத்துறையினர் வந்து அந்த மலைப்பாம்பை பிடித்தனர். அதன் நீளம் 18 அடி நீளம் கொண்டதாகவும் 40 கிலோ எடையோடும் இருந்தது.

அதனை பிடித்த வனத்துறை அதிகாரி அதனை பந்தாவாக எடுத்து தனது கழுத்தில் போட்டு கொண்டார். அதன்பின் அதோடு செல்பியும் எடுத்தார். அதுமட்டும் இல்லாமல் அந்த ஊர் மக்கள் சிலர் அவரோடு செல்பி எடுத்தனர்.

இதற்குள் கழுத்தில் இருந்த மலைப்பாம்பு மெல்ல அவர் கழுத்தை இறுக்க ஆரம்பித்தது. உடனே கிராமத்து மக்கள் அனைவரும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.

நல்லவேளையாக இன்னொரு வனத்துறை அதிகாரி லாவகமாக மலைப்பாம்பின் பிடியிலிருந்து அந்த அதிகாரியை விடுவித்தார். பின்னர் அந்த மலைப்பாம்பை அருகில் இருந்த வனத்தில் விட்டனர்.