இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண்கள்!!

595

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கு பல மனிதநேயப் பணிகளை பிரான்ஸ் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

IOSF (Institut D optique sans frontieres) என்ற மனித நேய அமைப்பை உருவாக்கி சேவைகளை முன்னெடுத்து வரும் குறித்த மாணவர்களில், ஆங்கில பெண்கள் இலங்கையரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

குறித்த பெண்கள் சேலை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளனர். வெளிநாட்டு பெண்களாக இருந்தாலும் தமிழர் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அதிக பற்று கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.

ஆங்கிலேயரின் வருகையின் போது தமிழர் நாகரிகப் பண்பாட்டில் பலவித மாறுதல்கள் ஏற்பட்டபோதும் அவர்கள் தமிழர் நடை, உடை பாவனையில் மிகவும் கவர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

ஆங்கிலேயப் பெண்கள் சேலை அணிந்து வருவது அதிசயமல்ல தமிழ் தலைமுறை தலைகீழாக தடம்புரண்டு வருவதுதான் கவலையாக உள்ளது.