தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு : திகைத்து நின்று மணமகன்!!

502

சிவகங்கை மாவட்டத்தில் தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவகோட்டை பூர்வீகமாக கொண்ட சென்னை தி.நகர் பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணுக்கும், வேந்தன்பட்டியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடக்க இருந்தது

இதற்காக இருவீட்டாரும், 3 மாதங்களுக்கு முன்பே திருமண அழைப்பிதழ்களை அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்தனர்.

திருமணத்துக்கு 5 நாட்களுக்கு முன்னரே தடபுடலாக விருந்தும், சடங்குகளும் நடந்து வந்தது. திருமண நாளான நேற்று காலை முகூர்த்த நேரமான 10.30 மணிக்கு சடங்குகள் நடந்து கொண்டிருந்தன.

திடீரென தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண், மாப்பிள்ளை பிடிக்கவில்லை எனக்கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்து எழுந்து சென்றுவிட்டார். இதனால் மண்டபத்தில் இருந்த இருவீட்டாரும் திகைத்து நின்றனர்.

கலகலப்பாக இருந்த மண்டபம் மயான அமைதியானது. சிறிது நேரத்தில் மண்டபத்தை விட்டு அனைவரும் வெளியேறினர்.