கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக உள்ள பலசரக்கு கடை ஒன்றின் மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்ளை சம்பவம் இன்று நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, குறித்த பலசரக்கு கடையில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியவர் நூதனமான முறையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வீ காணொளியை உடைத்தெறிந்து விட்டு கடைக்குள் நுழைந்துள்ளார்.
மிகவும் சூட்சமான முறையில் கடையில் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார். இதேவேளை, பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.