யாழ்- கொழும்புக்கிடையிலான விமான சேவை நிறுத்தம்!!

314

exloயாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையிலான விமான சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான சேவை நிறுத்தப்பட்டதிற்கான காரணம் தங்களுக்கு தெரியாதென்றும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சபையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விமான சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் மீண்டும் விமான சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.