வவுனியாவில் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிக்கப்பட்டது!!

523

சர்வதேச யோகா தினம் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் மைதானத்தில் கல்லூரியின் அதிபர் பா.கமலேஸ்வரி தலைமையில் இன்று (21.06) நடைபெற்றது.

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தூதரகத்தின் அதிகாரி எஸ்.நிரஞ்சன் கலந்துகொண்டிருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை போட்டு மேளதாளங்கள் முழங்க அழைத்துவரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

இந்திய துணைத்தூதரகத்தின் யோகா பயிற்றுவிப்பாளர்களான இ.தேவராஜா, செல்வி உ.கிந்துஜா, திருமதி எஸ்.அனுஸ்டா ஆகியோர் மாணவிகளுக்கு யோகா பயிற்சினை வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன், கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜா, உதவி கல்விப் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.