வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
பம்பலப்பிட்டி சென் பீற்றர் கல்லூரிக்கு அருகிலுள்ள பாலத்தை உடைத்துக் கொண்டு பயணித்த கார் கடுமையாக சேதமடைந்துள்ளது.
பாலத்துக்கு துணையாக அமைக்கப்பட்ட இரும்பு சட்டகத்தில் கார் பயணித்துள்ளதுடன், அருகிலிருந்த தூணில் மோதியுள்ளது.
இன்று அதிகாலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரில் பயணித்தவர்கள் ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளானவர்களின் பெயர் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





