திருகோணமலை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான வனப்பாதுகாப்பு பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்து “செல்பி” எடுத்த நான்கு பேரையும் ஒரு இலச்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான லைட் பார் என்ற இடத்திற்கு நான்கு பேர் சென்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் போது கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் துறைமுக அதிகார சபை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளர்.
இதனையடுத்து நேற்று நான்கு பேரையும் திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில்ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவித்தவர்கள் சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 15,17,19 வயதுடையவர்கள் எனவும் துறைமுக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





