வவுனியாவில் தபால் திணைக்கள ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம்!!

258

 

வவுனியாவில் தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை முன்வைத்து இன்று (22.06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட அஞ்சல் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் பங்குகொண்டிருந்தனர்.

பன்னிரெண்டு வருடங்களாக அஞ்சல் ஊழியர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் ஐந்து தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியிருந்தன.

வவுனியா பிரதான தபால் நிலையத்தின் முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணியானது மணிக்கூட்டு கோபுரத்தின் வழியாக பழைய பேரூந்து நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் கண்டிவீதி வழியாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களால் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. தபால் திணைக்களத்தின் ஊழியர்களால் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.