இரண்டு வயதான குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலி!!

262

வீட்டு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த இரண்டு வயதான குழந்தை கிணற்றுக்குள் விழுந்து பலியான சம்பவம் மரதங்கடவல கிரிபாவ பகுதியில் இடம்பெற்றள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தை தனது தாயுடன் உறவினரொருவரின் வீட்டுக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம், கிரிபாவ வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.