கல்லடி பகுதியில் உள்ள வாவியில் மிதந்த சடலம்!!

249

மட்டக்களப்பு – கல்லடி பகுதியில் உள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 30 வயதுடைய நபர் எனவும், கறுப்பு மற்றும் நீல நிற ஆடை அணிந்திருந்ததாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் வாவிப்பகுதியில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டது.

குறித்த சடலம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகவும் அடையாளம் காண்பதற்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.