உணவகத்தில் கொத்து வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

309

அம்பலந்தோட்டையிலுள்ள உணவகம் ஒன்றில் கொத்து ரொட்டி வாங்கிய நபருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட கோழி கொத்து ரொட்டியில் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்பலந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

சுகாதார வைத்திய அதிகாரி யூ.பி.மாலக சில்வாவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கொத்து ரொட்டியுடன் அம்பலந்தோட்டையில் உள்ள உணவு கடைக்கு சென்ற சுகாதார வைத்திய அதிகாரிகள், கடை உரிமையாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அதற்கமைய சம்பவத்திற்கு தொடர்புடைய உணவு கடையின் உரிமையாளர் 24ஆம் திகதி அம்பலந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கோழி கொத்து ரொட்டியுடன் தவளையின் உடல் சிதைந்து காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி யூ.பி.மாலக சில்வா தெரிவித்துள்ளார்.