மிகவும் வேகமாக பரவும் டெங்குக் காய்ச்சல் : அவதானம்!!

261

நாட்டின் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், குருநாகல், கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.

அத்துடன் மாதத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், பருவப்பெயர்ச்சி மழை காரணமாகவே டெங்குக் நோய் வேகமாக பரவியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.