தமிழகத்தில் இலங்கை அகதிச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!!

268

தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை அகதி போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தவசி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்த 17 வயது மாணவி, +2 பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.

தேர்வில் தேர்ச்சி பெறாததால் மறுதேர்வுக்கு விண்ணப்பித்து இருந்ததுடன் அக்கா வீட்டில் தங்கி டியூசன் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த மாணவி தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட உதயன்(வயது 36) என்பவர் வீட்டுக்குள் புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். யாரிடமும் இதை சொல்லக்கூடாது, மீறி கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி அக்காவிடம் கூற பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின் கீழ் உதயனை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.