உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோளை கண்டுபிடித்து சென்னையை சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரியில், ஹரிகிருஷ்ணன், அமர்நாத், கிரிபிரசாத், சுதி ஆகிய நான்கு மாணவர்களும் Aerospace பொறியியல் படிப்பில் முதலாமாண்டு படித்து வருகின்றனர்.
இவர்கள் நான்கு பெரும் இணைந்து ரூ.15 ஆயிரம் செலவில், வெறும் நைலான் இலைகளை மட்டுமே கொண்டு, 33 கிராம் எடை கொண்ட செயற்கைகோளினை உருவாக்கியுள்ளனர்.
வானிலை நிலவரங்கள் குறித்து அறிந்த கொள்ள பயன்படும் இந்த செயற்கைகோள், நாசா நடத்திய கியூப்ஸ் இன் ஸ்பேஸ் போட்டியின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் பலூன் உதவியுடன் விண்ணில் செலுத்த உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
முன்னதாக 64 கிராம் எடைகொண்ட செயற்கைகோளே உலகில் குறைந்த எடைகொண்ட செயற்கைகோள் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.






