க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!!

710

இந்த வருடம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு முன், அதனை வாசித்து தெளிவுபெறுவதற்காக 10 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்படவுள்ளது.

2018ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், ஆகஸ்டில் ஆரம்பமாகும் பரீட்சைகளானது எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள்களுக்கு 3 மணித்தியால நேரம் வழங்கப்படும். இந்த நிலையிலேயே, இம்முறை மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.