பிஸ்கட் திருடிய பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை!!

751

பிஸ்கட் பக்கெட் ஒன்றை திருடிய பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

120 ரூபாய் பெறுமதியான பிஸ்கட் பக்கட் ஒன்றை திருடிய சம்பவத்தின் குற்றவாளியான பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறைத்தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்தி வைப்பதற்கு கம்பஹா நீதிவான் நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் 1500 ரூபா மற்றும் 2500 ரூபா அபராத பணம் செலுத்துமாறு குறித்த பெண்ணுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு தொடர்பில் யக்கல பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மாங்காய் மற்றும் தேங்காய் திருடிய குற்றச்சாட்டிற்கு பாரிய தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.