பெருமளவான மக்களின் கண்ணீருடன் ரெஜினாவின் உடல் நல்லடக்கம்!!

255

யாழ். சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று மாலை ரெஜினா என்ற ஆறு வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று பிற்பகல் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து சிறுமியின் வீட்டில் இடம்பெற்ற இறுதி கிரியை நிகழ்வுகளை தொடர்ந்து, சிறுமி ரெஜினாவின் சடலம் திருவடிநிலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில், பொது மக்கள், காட்டுப்புலம் அ.த.க பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வெண்கரம் ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.