இலங்கையில் அறிமுகமாகும் புதிய பெற்றோல் : சாரதிகளுக்கு கிடைக்கவுள்ள நன்மை!!

303

இலங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாத்திரம் புதிய வகை பெட்ரோல் வகை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன்மூலம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் பாரிய இலாபத்தை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஊடாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு குறைந்த ஆக்டேன் எண்ணின் கீழ் தயாரிக்கப்படும் பெட்ரோல் இவ்வாறு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் அறிமுகம் செய்யப்படும் இந்த பெற்ரோல் கிட்டத்தட்ட 90 ஆக்டேன்களை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு மிகவும் சாதகமான பெறுபேறுகளை கொடுத்துள்ளன. இந்நிலையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்த பெற்றோல் உரிய முறையில் இயங்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த பெற்டோலினால் ஏற்படும் கழிவுகள் குறைவாகவே காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.