அயலவர் ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக போலி முறைப்பாடு செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணமான குறித்த பெண்ணின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமையினால் நீதிமன்றத்தில், குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட பெண்ணை கடுமையாக எச்சரித்த நீதிபதி ஒரு வாரம் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு போலி முறைப்பாடு செய்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அது போலி குற்றச்சாட்டு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்ட தினத்தன்று அயலவர் வீட்டில் இருக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த அயலவர் வாரியபொல பிரதேசத்திற்கு சென்றிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
சந்தேக நபரான பெண்ணின் இரகசிய கணவரின் ஆலோசனைக்கு அமைய அயலவருக்கு எதிராக குறித்த பெண் போலி முறைப்பாடு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு கடுமையாக எச்சரித்த நீதிபதி கடுமையான வேலையுடன் கூடிய ஒரு வார சிறைத்தண்டனை விதித்துள்ளார்.