கடல் அலையில் சிக்கி இரட்டையர்கள் பரிதாபமாகப் பலி : சோகமாய் மாறிய மகிழ்ச்சியான தருணம்!!

421

மேற்கு வங்கத்தில் மந்தர்மணி பீச்சுக்கு சென்ற இரட்டையர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் புகழ்பெற்ற மந்தர்மணி பீச் உள்ளது, இந்தியாவிலேயே மோட்டார் வாகனங்கள் செல்லும் வசதி கொண்ட ஒரே பீச் என்ற பெருமை கொண்டது.

சமீபகாலமாக இங்கு நடத்தப்படும் போட்டிகள் விதிமுறைகளையே மீறியே இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், மால்டா மாகாணத்தை சேர்ந்த இரட்டையர்கள் Arkaprabha Chakraborty மற்றும் Alolika Bengali, இருவரும் தங்களது நண்பர்களுடன் இந்த பீச்சிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர்.

திட்டமிட்டபடி கடந்த ஞாயிற்றுகிழமை நால்வரும் சுற்றுலா சென்ற போது, இளம்பெண்ணை தவிர மற்ற மூவரும் கடல் நீருக்குள் இறங்கியுள்ளனர்.

அப்போது அவர்களை திடீரென வந்த அலை ஒன்று அடித்து சென்றுள்ளது, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் இரட்டையர்கள் உயிரிழந்துவிட்டனர்.

இதற்கு முன்னரும் கடந்த சில ஆண்டுகளாக அலையில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, ராட்சத பலூன்கள் மூலம் எச்சரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு தூரம் வரை நீச்சல் அடிக்கலாம் என்பது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.