காணாமல் போன தொழிலதிபர் கொலை : டேப்பால் சுற்றி கல்லை கட்டி அணையில் வீசிய கொடூரம்!!

408

திருப்பூர் பின்னலாடை தொழிலதிபரின் உடல் ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் மிதந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் பின்னலாடை தொழிலதிபர் சிவமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன் கடத்தப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரான இவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆம்பூர் டோல்கேட் பகுதியில் சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் அடிக்கடி வந்து போய் கொண்டிருந்ததால் டோல்கேட் நபர்கள் பொலிஸாரிடம் இது பற்றி கூறினர்.

காவல்துறையினர் சொகுசு காரில் உள்ளவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அந்த கார் சிவமூர்த்திக்கு சொந்தமானது என்பதும் அதில் இருந்த மூவரும் சிவமூர்த்தியை கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அவர்களிடம் மேலும் விசாரணை செய்ததில் சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்து கெலவரப்பள்ளி அணையில் வீசியதை குற்றவாளிகள் ஒப்பு கொண்டனர். மேலும் சடலம் வெளியே தெரியாமல் இருக்க அங்கிருந்த மைல் கல் ஒன்றை உடலில் கட்டி வீசியதால் இரண்டு நாட்கள் கழித்து சடலம் வெளிவந்ததாக பொலிஸார் கூறினர்.

நீரில் வீசப்பட்ட சிவமூர்த்தியின் உடலில் கை கால்கள் கட்டப்பட்டு முகம் முழுவதும் டேப் பால் சுற்றப்பட்டு இருந்தது கொடூரமாக இருந்தது.

சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரும், தொழிலதிபருமான சிவமூர்த்தி கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தற்போது அந்த பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.