யாழ். சிறுமி றெஜினா கொலை சம்பவத்தில் பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்!!

298

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட “சிறுமி றெஜினாவை நான்தான் கொலை செய்தேன்” என இளைஞர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பொலிஸாரின் விசாரணைகளில் வேறு சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி நேற்று வட்டுக்கோட்டை பொலிஸார் சிலரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில் 7 வயதுச் சிறுவனின் வாக்குமூலத்தில் இருந்தே சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

“சிறுமி றெஜினாவுக்கு பிஸ்கட் மற்றும் ஜெலி என்பவற்றை வாங்கிக் கொடுத்து மூன்று பேர் அழைத்துச் சென்றதை தாம் பார்த்ததாக” அந்த சிறுவன் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஆனால் “சிறுமி பாடசாலை முடிந்து வந்ததும் புறா காட்டுவதாக ஆசை வார்த்தை காட்டி மறைவான இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்று, சிறுமியை துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி கயிற்றால் கழுத்தை நெரித்துவிட்டு கிணற்றில் தூக்கி வீசியதாகவும், தோட்டுக்காகவே கொலை செய்ததாகவும், இதை தான் மட்டுமே செய்ததாகவும்” சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சிவகுமார் சதீஸ்குமார் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞனை நீதிமன்றில் முன்னிலப்படுத்தி அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், ஐவர் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர்.

ஆனால், குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தந்தையை பழிவாங்குவதற்காகவே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் ஒரு செய்திகள் வெளிவந்தன.

இதில் எது உண்மை? பழிவாங்க நடைபெற்ற கொலையா? தோட்டுக்காக கொலை செய்யப்பட்டாரா? பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதா? அல்லது சிறுவன் கூறியதைப் போல் மூவர் இதில் தொடர்புபட்டுள்ளார்களா என்பது மர்மமாகவே உள்ளது.