சொந்த வீட்டிலேயே கொல்லப்பட்ட நபர் : மகள்கள், மனைவியே திட்டம் தீட்டியது அம்பலம்!!

316

இந்தியாவில் கூலிப்படையை ஏவி தந்தையை திட்டம் தீட்டி கொன்ற மகள்கள் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் Meharbaan Ali, இவரது மனைவி Zahida Begum மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். சப் இன்ஸ்பெக்டரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.

பொலிசார் விசாரணை நடத்தியதில், இவர்களது வீட்டிலிருந்து வெறும் 250 மீற்றர் தொலைவில் பாதாள சாக்கடையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இவரது குடும்பத்தினர் மீது பொலிசுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து இவரது மனைவியின் செல்போனை ஆய்வு செய்த போது ஒரு நம்பருக்கு தொடர்ந்து போன் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபரை பிடித்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

Meharbaan Ali இறந்துவிட்டால் பென்ஷன் பணம் கிடைக்கும் என்பதற்காவும், அதிக கட்டுப்பாடுகளை விதித்ததால் மனைவி மற்றும் மகள்களே திட்டம் போட்டு கொன்றதும் தெரியவந்துள்ளது.

சம்பவதினத்தன்று பணிமுடிந்து வீட்டுக்கு வந்தவரை கூலிப்படை வைத்து கொன்றுள்ளனர், அன்றைய தினம் மாலையே அவரது சடலத்தை பாதாள சாக்கடையில் போட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

Meharbaan Ali இறந்துவிட்டால்,

குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைக்கும்.
மாதந்தோறும் மனைவிக்கு பென்ஷன் வரும்
பணியில் இருக்கும் போது இறந்ததால் உதவி கிடைக்கும்.
இந்த மூன்று காரணங்களுக்காகவே குடும்பத்தினர் திட்டம் போட்டு கொன்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.