மட்டக்களப்பு – வெல்லாவெளி, விவேகானந்தபுரம் பகுதியில் 17 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அரியநாயகம் நிருலக்ஷனி என்பவரே நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் யாருமில்லாத போது தனது அறையில் குறித்த யுவதி தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில், வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை அவதானித்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டுள்ளனர்.
இருப்பினும், வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட போது மாணவியின் உயிர் பிரிந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவமானது அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





