வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!

400

7 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 48 வயதான நபரை கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோட்டுகச்சி – தங்கஹாவெல பிரதேசத்தை சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வயலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய போது பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சிறுமியின் பெற்றோர் சம்பவத்தை அறிந்து புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.