9ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை : வேகமாக பரவும் அதிர்ச்சி வீடியோ!!

468

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்ததால் அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நேற்று மாலை 4.30 மணி அளவில் மும்பை கண்டிவாலி அருகே உள்ள தாகூர் எனும் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு சிறுமி ஹர்ஷிகா மாயவந்தி எட்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கான காரணங்கள் இன்னமும் தெரியவில்லை.

உயிரை மாய்த்து கொள்வதற்காக தனது வீட்டிற்கு அருகில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் ஏறிய ஹர்ஷிகா மாயவந்தி அங்கிருந்த ஜன்னல் ஒன்றின் மேல் நிற்கும்போது அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்து குதிக்காதே திரும்ப மாடிக்கு செல் என்று கத்தியுள்ளனர். அந்த குரல்களை பொருட்படுத்தாத ஹர்ஷிகா அங்கிருந்து குதித்திருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்த போது குடியிருப்பில் இருந்த ஒருவர் இதனை வீடியோ எடுத்திருக்கிறார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் கொண்டு வரும்போதே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். ஹர்ஷிகாவின் உடல் பிரேதபரிசோதனைக்கு பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிய வருகிறது.

இதுபற்றி பொலிஸார் கூறுகையில் ஹர்ஷிகாவின் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என்றும் அவர் தற்கொலை கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்றும் கூறினார். ஹர்ஷிகாவின் குடும்பத்தார் அதிர்ச்சியில் இருப்பதால் அவர்கள் இப்போது பேசும் நிலையில் இல்லை என்று தெரிவித்தனர். இந்த மரணம் பற்றிய விசாரணை தொடர்கிறது.