முஸ்லீம் மதத்திற்கு மாறுமாறு அடித்து கொடுமைப்படுத்திய கணவன் : மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

375

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லீம் மதத்திற்கு மாற வற்புறுத்திய கணவரை துப்பாக்கி சுடும் வீராங்கனை விவாகரத்து செய்துள்ளார்.

இந்து மதத்தை சேர்ந்த தாரா ஷாதியோ என்ற துப்பாக்கி சுடும் வீராங்கனையை, கடந்த 2014ம் ஆம் ஆண்டு, ரஞ்சித் சிங் கோலி என்ற ரஹீப் அல் ஹசன் என்பவர் தான் ஒரு முஸ்லீம் என கூறாமல் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் முஸ்லீம் மதத்திற்கு மாறும்படி தனது மனைவியை கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், அடித்து கொடுமைபடுத்தியுள்ளார்.

தனக்கு உடலில் ஏற்பட்ட காயங்களை பொலிசில் காட்டி, நடந்தவை குறித்து புகார் அளித்துள்ளார். லவ் ஜிகாத் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், அறிக்கை அளிக்கும்படி மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

தொடர்ந்து ஷாதியோவின் வேண்டுகோளை ஏற்று, இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. மேலும், ஷாதியோ 2017 ம் ஆண்டில் விவாகரத்து கேட்டு, ராஞ்சி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி கவுதம், ஷாதியோ கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாகவும், மதம் மாற கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை எனவும் கூறி விவாகரத்து வழங்கியுள்ளார்.