லண்டன் மாப்பிள்ளைக்கு மகளை திருமணம் செய்து வைக்க நினைத்த தந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!

399

தமிழகத்தில் ரத்தம் வடியும் முகத்துடன் நபர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவர் கடந்த மாதம் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக லண்டனில் பணிபுரியும் முகமது அஸ்லாம் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

அதன் பின் முகமது அஸ்லாம் லண்டனில் பணி புரியவில்லை என்பதை அறிந்தவுடன், திருமணத்தை நிறுத்தியுள்ளார். ஆனால் இது குறித்து அஸ்லாம் அவரிடம் தகராறில் ஈடுபட்டதால், இப்ராஹிம் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் முகமது அஸ்லாமை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த அஸ்லாமின் உறவினர்கள் மண்ணடியில் இருக்கும் சையது இப்ராஹிம்மை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதனால் அவர் ரத்தம் வடிந்த முகத்துடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.

இரத்தம் வடிந்த முகத்துடன் வந்ததால், பொலிசார் முதலில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்