வவுனியாவில் 5 போத்தல் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது!!

981

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவில் நேற்று (29.06) சட்டவிரோத கசிப்பு 5 போத்தல்களை தனது உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று பிற்பகல் ஓமந்தை பொலிஸ் பிரிவின் பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதியில் சட்விரோதமான கசிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில்,

அங்கு சென்று சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது அப்பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 38வயதுடைய நபர் ஒருவர் தனது உடமையில் 5 போத்தல் சட்டவிரோத கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக ஓமந்தை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்.