திருவள்ளூரில் ஐந்து மாத குழந்தையின் கழுத்தையும் காதையும் அறுத்து அவர்கள் வீடு வாசலில் எறிந்த மர்ம நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூரில் உள்ள பாண்டூர் எனும் பகுதியில் மேற்குறிப்பிட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் அங்கிருந்த ஐந்து மாத குழந்தையை தூக்கி சென்றிருக்கிறான்.
அதன்பின் அக்குழந்தையின் கழுத்தையும் காதையும் அறுத்த அந்த நபர், குழந்தையை அதே வீட்டின் வாசலில் போட்டு விட்டு போயிருக்கிறான்.
குழந்தையை தேடி கொண்டிருந்த குடும்பத்தார் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாசலில் கிடந்த குழந்தையை பார்த்து அலறியிருக்கின்றனர்,
அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொடூர செயலை செய்தவன் யார் அவன் நோக்கம் என்ன என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.