சுற்றுலா சென்ற 5 பேரை அடித்தே கொன்ற பொதுமக்கள் : அதிர்ச்சி தரும் காரணம்!!

578

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 5 பேரை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடு முழுவதும் குழந்தை கடத்தும் கும்பல் களமிறங்கியிருப்பதாக வெளியான சமூக வலைதள வதந்தியை நம்பி இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் துல மாவட்டம் ரயின்பாதா கிராமத்தில் 5 பேரை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். இவர்கள் ஐந்து பெறும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த கொலையில் ஈடுபட்ட மக்கள் யார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் அங்கு சுற்றுலா சென்றவர்கள் என்பதும், குழந்தை கடத்தல் கும்பல் இல்லை என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில், உங்கள் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துகிறது, பாதுகாப்பாக இருங்கள் என்று ஒரு வட்ஸ் அப் தகவல் தீயாக பரவியது.

மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான இந்த வட்ஸ் அப் வதந்தி காரணமாக கடந்த 5 மாதங்களில் மட்டும் 23 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.