சமூகவலைதளத்துக்கு அடிமையான மனைவி : கணவன் எடுத்த அதிரடி முடிவு!!

525

இந்தியாவில் மனைவி சமூகவலைதளத்துக்கு அடிமையானதால் வெறுப்படைந்த கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

புதுடெல்லியை சேர்ந்தவர் நரேந்திர சிங் (30). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகவுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்னர் குடும்ப நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரினார்.

அந்த மனுவில், திருமணமான நாள் முதல் என் மனைவி சமூகவலைதளத்தில் தான் எப்போதும் மூழ்கியுள்ளார்.

எனக்கு மற்றும் என் குடும்பத்தாருக்கு நேரம் ஒதுக்குவதில்லை, இரவில் வாட்ஸ் அப்பில் ஆண் நண்பர்களுடன் வெகுநேரம் அவர் பேசுகிறார்.

இது எனக்கு தொந்தரவாக இருக்கிறது என அவரிடம் கூறினால் என்னை மிரட்டுகிறார். இதனால் எனக்கு விவாகரத்து வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நரேந்திர சிங்கின் மனுவை நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது. இந்த மாதத்தில் நரேந்திர சிங் மற்றும் அவர் மனைவிக்கு கவுன்சிலிங் செய்ய நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.